உலகப் பொதுமறை

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னை தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளை பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
-திருவள்ளுவர் -(அதி: தீவினையச்சம்)

Hold on To Your Dreams ! Your Day Will Come !!

Sunday, June 17, 2007

வட இந்திய இனிப்பு - காஜு கத்ரி


சமையல் குறிப்பு போடறதுன்னு ஆரம்பிச்சாச்சு.. ஸ்வீட்டோட ஆரம்பிக்கலாமா?

4 பேருக்கு காஜுகத்லி தயார் செய்ய தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு - 4 கப் (பொடியாக அரைத்துக் கொள்ளவும்)
சர்க்கரை - 4 கப்
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய் - 2-3 பொடி செய்து வைத்து கொள்ளவும்.
வெள்ளி பஸ்பம் - 1 தாள்
அலுமினியம் ஃபாயில்

செய்முறை

1. மிதமான சூட்டில் தண்ணீரையும் கொதிக்க வைத்து, சர்க்கரையை சேர்த்து அது கெட்டியாகும் வரை வைக்கவும்.

2. சூடான கெட்டியான சர்க்கரை தண்ணீரில் முந்திரி பருப்பு பொடி மற்றும் ஏலக்காய் பொடியை கெட்டியான மாவாகும் வரை கலக்கவும்.

3. நன்றாக கலந்த பின் அலுமினியம் ஃபாயிலில் கொட்டி திரட்டியால் மெல்லிசான பருமனுக்கு பரப்பி விட்ட பின் ஆற விடவும்.

4. ஆறிய பின் அதை விரும்பும் வடிவில் துண்டுகள் செய்து பரிமாறவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20-25 நிமிடங்கள்

முயற்சி செய்து பாருங்கள்... உங்களுக்கு விருப்பமான சமையற்குறிப்பையும் தெரிவிக்கலாம்... "சுட்டு" போடுகிறேன்...

0 எதிரொலிகள்: